Tuesday 21 April 2015




**********************************************************
சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை! இந்த மண்ணில்-ஆனால்
பஞ்சமே! சுவாரசியமானதும் இந்த மண்ணிலே! தான்!
**********************************************************
வயதோ! அதிகரிக்கிறது
ஆயுளோ! குறைகிறது
"பிறந்த நாள் கொண்டாட்டம்"
**********************************************************

நீயும் நானும்
சேர்திருக்கும் போது வராதது...
நீயா நானா என்று
விவாதிக்கும் போது வருவது...
நாம் இம்மண்ணில்
தோன்றும் போது தோன்றியது
நாம் இம்மண்ணில்
இருக்கும் வரை ஆட்கொண்டிருக்கும்
நினைவுகளின் சங்கமம்.
நாம் இருக்கும் போது
நம் மதிப்பை அறியாதது...
நாம் மாய்ந்தப்பின்
நிரந்தரமாவது...
இப்படிக்கு
"பிரிவு"
**********************************************************

தினம் தினம்
கிழிக்கப்படுகிறேன்
உங்களால்
நான்!

என்னை
கிழித்த
நீங்கள்
என்ன
கிழித்தீர்கள்!
என்று
தெரியாமலே!

காலத்தின்
அருமையை
உணர்ந்து
கிழியிங்கள்!

வீணாக
என்னை
கிழிக்காதீர்கள்!

"நாட்காட்டி"

**********************************************************
மழை வர மாதிரி...
"crowd" ட" இருக்கு
"cloud" ....
**********************************************************

‪எல்லோரும்‬ அடுத்தவர்கள் எப்படி வாழவேண்டும்...
‪‎என்பதில்‬ தெளிவாக இருக்கிறார்கள்....
‪‎தான்‬ எப்படி வாழ வேண்டும் என்று தான்...
‪‎யாருக்கும்‬ தெரிவதில்லை!

**********************************************************

‪‎நம்மை‬ பற்றி அடுத்தவர் "குறை" கூறாதவரை
‪‎நாம்‬ அடுத்தவரின் "நிறையை" "குறை"
‪‎ஆக்குவதில்லை‬!
**********************************************************

"நீ" எப்போதும்
கொட்டும் ‪"அருவியாக‬" இரு
சொட்டு ‪‎நீராகிவிடாதே‬!
பிறருக்கு கொடுப்பதில்!
**********************************************************

‪தண்ணீர்‬" -ஆக இருந்தாலும்
"கண்ணீருக்கு" மதிப்பு அதிகம்
உனக்காக "கண்ணீர் "சிந்தும்
உறவுக்களை சேர்த்துகொள்!

**********************************************************

நான் பேச்சளார் இல்லை- ஆனால்,
என் எழுத்து ஒருவரை பேசவைக்கும்!...

"நான் எழுத்தாளர் இல்லை -ஆனால்,
ஒரு எழுத்தாளரின் படைப்பு.....
என்னை பேசவைக்கும்!.....

**********************************************************

"கைம்பெண்"...

இவர்கள்
பொட்டுகளை
இழந்த
மலர்ந்த
மொட்டுக்கள்....?

*********************************************************

‪‎தண்ணீர்‬ தின உறுதிமொழி!

"நீரின்" அவசியத்தை
உணர்ந்த-"நீர்"

ஒருபோதும் மறவாதீர்கள்
"நீர் " இல்லாமல்
"நீர்" இல்லை...

"நீருக்காக" காத்திருக்கும் "நீர்"
அதை வீணாடிக்காமல் பார்த்து
கொள்வீர்!-நீர்

"நீர்" இல்லாவிட்டால்
"நீரும்" இருக்க முடியாது.
என்பதை உணர்ந்த "நீர்"

அதை போக்க!
மழை நீரை சேமிப்பீர்!-நீர்
"நீர்" இல்லா பூமியை!
"நீரால்" நீரப்புவீர்!-நீர்

**********************************************************

‪சில்லரை‬ (காசு)

நாம் இருக்கும்போது நித்திரை!
நாம் இறந்தபின் முத்திரை!

**********************************************************

தேவையானதை வாங்குவதைவிட
அவசியமானதை வாங்குவதை
‪‎வழக்கமாக்கிகொள்ளுங்கள்‬!-ஆனால்

அவசியமானதை தேவைக்கு மேல் வாங்குவதை
‪‎பழக்கமாக்கி‬ கொள்ளாதீர்கள்!

**********************************************************

உலக வனநாள் "உறுதிமொழி"

காடு அழுகிறது வீடாக மாறுவதற்கு
தன்னை அழிப்பதால் அல்ல!

தன்னை அழிக்கும் மனிதர்கள்
தன்னால் அழியப்போவதை நினைத்து!

காட்டை அழித்து
வீட்டை வளமாக்கும் முன்-யோசி

நீ அழிப்பது காட்டையல்ல!
உன்னையே!

மரத்தை நட மறந்தாலும்-அதை
வெட்ட நினைக்காதே!

மரம் வளர்ப்போம்!
காட்டை பாதுகாப்போம்!

**********************************************************

வாழ்க்கையில
நம்பி"கை" வைத்தால்
எதையும் சாதிக்கலாம்
"நமது நம்பிக்கை"யால்

**********************************************************

பணத்துக்காக
வயித்த நிரப்ப நாய் மாதிரி அலைஞ்ச அவன் ஏழை!

பணம் கொடுத்து வாங்கி
வயித்த குறைக்க நாயோட அலைஞ்ச அவன் பணக்காரன்!

**********************************************************

பெரும்பாலோனோர்
வாழ்க்கையை
நேற்றையை நினைவில்
இன்றையை நிஜத்தை
நாளைய கனவில்
தொலைக்கிறோம்!

**********************************************************

உங்கள் குழந்தைகளை
படிப்பதற்காக அடிக்காதீர்கள்!
அடிப்பதனால் படிப்பதைவிட
படிப்பதைவிடவே விரும்புவர்கள்!

"அடிச்சா" வராது
"புடிச்சா" தான் வரும்
"படிப்பு'

**********************************************************

"தன்"
"பலவீனத்தை" அறிந்திருப்பதே "பலம்"...
"தன்"
"பலத்தை" அறியாமலிருப்பதே "பலவீனம்"...

**********************************************************

"பொய்"கேட்கும் போது
"இனிப்பாக"த்தான் இருக்கும்-அது
"உண்மையில்லை" என்று
தெரியும்போது தான்
"கசப்பாக"மாறுக்கிறது!

**********************************************************

"வாழ்க்கையில்" கற்றுக்கொள்ளும் வரை
"வியப்பாக" இருந்தது எல்லாம்
கற்றப்பின் இம்புட்டு தானா!
என்று மாறுவது தான்-பெரும்
"வியப்பாக" இருக்கிறது!

**********************************************************
"வாழ்க்கையில"
"யாருமே" ஜெயிக்கனுமேன்னு"போராடல!
"போராடி"தான் ஜெயிக்கறாங்க!பெரும்பாலும்!

**********************************************************

Sunday 19 April 2015

*****************************************************
ஆணும்-பெண்ணும்
திருமணம் எனும் தேர்வு
எழுதுகிறார்கள் அதில் வெற்றிபெற்றால்
அம்மா-அப்பா என்ற பட்டம் இருவருக்கும்-ஆனால்
தோல்வியடைந்தால் "பெண்" மட்டும்
பட்டம் பெறுகிறாள் "மலடி"யாக.....

******************************************************

வீண்-வாழ்க்கை!
 
சோளக்காட்டு பொம்மைக்கு தெரியாது!-அது
விரட்டுவது உயிருள்ள பறவைகளை தான் என்று!
அந்த உயிருள்ள பறவைகளுக்கும் தெரியாது!
நம்மை விரட்டுவது உயிரற்ற பொம்மை தான்!-என்று!
வாழ்க்கையில் சிலபேர் அந்த சோளக்காட்டு பொம்மையை
போல் கூட வாழ்வதில்லை!
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாதது வாழ்கிறது மனிதனுக்காக..
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்த மனிதா!
நீ எப்போது வாழ்வாய்?
சக மனிதனுக்காக.....

******************************************************


ரெட்டை வாழைப்பழம்
சாப்பிட்டா இரட்டை குழந்தை பிறக்குமாம்
அய்யோ-பாவம்!
இதுத்தெரியாமல்
ஒற்றைக்குழந்தை இல்லாததால்
நம் சமூகம் வழங்கிய
"மலடி"என்ற பட்டதுடன்
"பெண்கள்"

*****************************************************

வாழ்க்கையில பெருபாலும்
"நடக்காத காரியங்களுக்கு"
"முக்கிய பிரச்சனையே"
"நடக்கணும்" என்பது தான்-அட
ஆமாங்க! உங்க கொழுப்பை குறைக்கனுன்னா
நீங்க தினமும்
"நடக்கணும்"
"நடக்கற காரியமா"சொல்லுங்க
நடக்கலன்னா
"காரியம் நிச்சயம்"

******************************************************

வாழ்க்கையில நமக்காக யாருமே இல்லன்னு நினைச்சிட்டு இருக்கோம்!
யாருமே! இல்லாத இடத்திலே இருக்கோம் என்பத மறந்து!

******************************************************
வாழ்கையிலே
விமர்சனங்கள் இல்லைன்னா?
"குறை" தெரியாது!
"நிறை"யை நிறைய தெரிஞ்சுக்கனுன்னா?
விமர்சனம் தேவை!

******************************************************

ஒரு குடத்தில தண்ணீர் 3/4 வாசி தான்
இருகின்னு "FELL" பண்ணுவதைவிட!
1/4 வாசி தான் இல்லேன்னு "FILL" பண்ணு!
வாழ்க்கை என்பதே!
feeling"களும்,"filling" களும் நிறைந்ததே!

******************************************************

‪#‎எது‬ வளர்ச்சி?

நேற்றையை நினைவில்
இன்றையை நாளை
சந்தோசமாக கழிப்பதும்
வளர்ச்சி ஆகாது!
நாளைய நினைவில்
இன்றையை நாளை
வீணாக கழிப்பதும்
வளர்ச்சி ஆகாது!
இன்றையை நாளில்
நேற்றையை நினைவையும்
நாளைய நினைவையும்
கலக்காமல் வாழ்வதும்!
நேற்றையை செயல்பாட்டைவிட
இற்றையை செயல்பாடு அதிகமாகவும்
நாளையை செயல்பாட்டைவிட
இன்றையை செயல்பாடு குறையாமலும்
செய்வதே வளர்ச்சி!
மொத்தத்தில் உன்னிடத்தில் உள்ளது தான்
உன் வளர்ச்சி!
போட்டி என்பது வாய்ப்பு
வெற்றி என்பது மகிழ்ச்சி
தோல்வி என்பது அனுபவம்
தோல்வி என்ற அனுபவத்தின்-மூலம்
வெற்றி என்ற மகிழ்ச்சியை
போட்டி என்ற வாய்ப்பினால்
முயற்சிச்செய்து அடைவோம்!

******************************************************

‪#‎அன்பை‬ விதையிங்கள்
"விருச்சமாக"
******************************************************

நன்றாக பேசுவதாக
நினைத்து ஒருவரின் மனதை
புண்படுத்துவதைவிட்டு
எதுவுமே பேசமால்
அவருடைய புண்ணுக்கு
மருந்திடலாம்!
******************************************************

வாழ்க்கையில
சுலபமானதை பின்பற்றுவதைவிட
கஷ்டமானது ஏதுவுமில்லை!
உன்னைப்போல் பிற
"உயிரையும் நேசி"

******************************************************

நேர்மை என்பது
அடுத்தவர்களுக்கு உண்மையாக
நடந்துகொள்வதில் இல்லை-மாறாக
தன் "மனசாட்சிக்கு"
உண்மையாக இருப்பதிலேயே
உள்ளது!

******************************************************

மனிதர்களில்
தியாகத்தை கூட கடமையாக
செய்யும் தியாகிகளும் உண்டு!

கடமையை கூட
தியாகங்களாக சித்தரிக்கும்
மகா தியாகிகளும் உண்டு!

******************************************************



‪#‎மனமாற்றம்‬!

சர்க்கரை உண்ணும் போது
கற்கண்டாக இனித்தது "மனம்"
"இன்சுலின்" என்னவென்று தெரியததால்!

சர்க்கரை என்றாலே கசப்பாக நினைக்க செய்தது"மனம்"
"இன்சுலின்"ன்ன என்னவென்று தெரிந்ததால்!
******************************************************
வாழ்க்கையில
இறந்தும் வாழலாம் என்பதை
தெரிந்தும் வாழமால் இறக்கிறோம்!
ஆறாம் அறிவின் சாதனை தான் இது!
*****************************************************

"பாச கயிறோடு"
வருகிறான் "எமன்"
"உயிர் எடுக்க"
******************************************************
பசுவிடம்
பாலை கரந்து எடுத்துக்கொண்டு
பசு சரியாக பால் கொடுக்கவில்லை
என்கிறான் மனிதன்!-ஆம்
கொடுக்கவில்லை தான் பசுவின்
கன்றுக்கு....
******************************************************

நான் உங்களுடன்
இருக்கவேண்டிய அவசியமில்லை!-இருக்கிறேன்
என்பதை உணர்தலே! அவசியம்!
"நினைவுகள்"
******************************************************


‪#‎மௌன‬-போர்!

நான் உன்னிடம்
பேசாமல் இருந்தபோது சுகமாக இருந்தாய் "நீ"

நான் உன்னிடம்
பேசியபோது சோகமாக இருந்தாய் "நீ"

நான் பேசிய வார்த்தையைவிட
பேசாத வார்த்தையை தான் விரும்புகிறாய் "நீ"

என் மௌனத்திற்கு தான் எத்தனை "வலி"மை

******************************************************

‪#‎H2O‬"

நீர் இல்லாமல் காற்றில்லை
காற்றில்லாமல் நீரில்லை
நீரையும்,காற்றையும் பிரிக்க
என் மனம் விரும்பவில்லை!
நீரும்,காற்றும் இல்லாமல்
யாருமில்லை என்பதால்!
******************************************************

"நீ"
உன் வாழ்நாளில்
மரத்தை நட மறந்தாலும்-அதை
வெட்ட நினைக்காதே!
******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com
******************************************************

‪#‎மனிதர்களுக்கு‬ கணிதம் சொல்லும்
வாழ்க்கை பாடம்!
‪#‎கணித‬ செயல்பாடும் மனித வாழ்வும்!

3+3=6 என்று கூறினால் இது சரி இதை தான் சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
3+3=4 என்று கூறினால் இது தவறு என்றும் இதை சொல்லக்கூடாது என்றும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
இதைப்போலவே மனித வாழ்க்கையிலும் இப்படி தான் சக மனிதர்கள் தங்களிடம் நடந்துக்கொள்ள வேண்டுமென்று நம் மனம் எதிர்ப்பார்க்கிறது.

அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உறவுகள் சரியானது எனவும்,
அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத உறவுகள் தவறானதாகவே
நாம் நினைத்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையில
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றமடைய செய்கிறது-அதே
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றவும் செய்கிறது!
என்பதை புரியாமல்,

இங்கே
3+3=6 என்பது அந்த தருணத்தில் அந்த செயல்பாடு சரியானதாக அமையுமே
தவிர எல்லாம் தருணத்திலும் அது சரியானதாக அமைய வாய்ப்பில்லை.
உதாரணமாக
3-3=0, இங்கே எண்கள் அதே தான், ஆனால் செயல்பாடு வேறு, எதிர்ப்பார்ப்பதும் வேறு, வாழ்க்கையும் அப்படி தான்!
உன் செயலுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
அதுபோலவே,

3/3+3=4,அங்கே நாம் தவறு என்று சொன்னது சரியாகிறது,
காரணம், செயல்பாட்டில் மாற்றம் அதுபோல தான்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
உணரும் பட்சத்தில் அவர்களின் சூழலிலேயே அதை நாம் அணுக வேண்டுமே தவிர
அவகளின் செயல்பாடுகளை சரி,தவறு, என்று நாம் தரம் பிரிக்கக்கூடாது.

இங்கு எண்கள் மனிதர்களையும்,
செயல்பாடுகள் என்பது அவர்களின் எண்ணத்தையும்
இங்கு முடிவு என்பது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
என்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக,

கடும் பனியின் தாக்கத்தில் வாழும் மனிதருக்கு
சூரிய உதயம் என்பதே வரபிரசாதம்!
கடும் வெப்பத்தால் அவதியுறும் மனிதருக்கோ!
சிறு மழை சாரல் கூட வரம் தான்!
ஆகையால்,இங்கு
எது சரி? எது தவறு?என்பதை நம்முடைய
சூழல்தான் தீர்மானிக்கின்றன!
என்பதை உணர்வோம்!

சிறிது நேரம் எண்களோடு விளையாடினேன்!
எண்களுக்கு தான் மனித வாழ்க்கையோடு எத்தனை தொடர்பு!
எண் கணிதம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லை
மனித எண்ணங்களிலும் தான்!

வெறும் எண்ணிக்கையில் உயந்ததல்ல வாழ்க்கை!
நல்ல எண்ணங்களால் உய்ரந்ததே வாழ்க்கை!

என்னே கணிதம்!-நம்
எண்ணமே! கணிதம்!

******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com

******************************************************

‪#‎மனிதர்களுக்கு‬ கணிதம் சொல்லும்
வாழ்க்கை பாடம்!
‪#‎கணித‬ செயல்பாடும் மனித வாழ்வும்!

3+3=6 என்று கூறினால் இது சரி இதை தான் சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
3+3=4 என்று கூறினால் இது தவறு என்றும் இதை சொல்லக்கூடாது என்றும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
இதைப்போலவே மனித வாழ்க்கையிலும் இப்படி தான் சக மனிதர்கள் தங்களிடம் நடந்துக்கொள்ள வேண்டுமென்று நம் மனம் எதிர்ப்பார்க்கிறது.

அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உறவுகள் சரியானது எனவும்,
அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத உறவுகள் தவறானதாகவே
நாம் நினைத்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையில
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றமடைய செய்கிறது-அதே
எதிர்ப்பார்ப்பு தான் ஒரு மனிதனை ஏமாற்றவும் செய்கிறது!
என்பதை புரியாமல்,

இங்கே
3+3=6 என்பது அந்த தருணத்தில் அந்த செயல்பாடு சரியானதாக அமையுமே
தவிர எல்லாம் தருணத்திலும் அது சரியானதாக அமைய வாய்ப்பில்லை.
உதாரணமாக
3-3=0, இங்கே எண்கள் அதே தான், ஆனால் செயல்பாடு வேறு, எதிர்ப்பார்ப்பதும் வேறு, வாழ்க்கையும் அப்படி தான்!
உன் செயலுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
அதுபோலவே,

3/3+3=4,அங்கே நாம் தவறு என்று சொன்னது சரியாகிறது,
காரணம், செயல்பாட்டில் மாற்றம் அதுபோல தான்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
உணரும் பட்சத்தில் அவர்களின் சூழலிலேயே அதை நாம் அணுக வேண்டுமே தவிர
அவகளின் செயல்பாடுகளை சரி,தவறு, என்று நாம் தரம் பிரிக்கக்கூடாது.

இங்கு எண்கள் மனிதர்களையும்,
செயல்பாடுகள் என்பது அவர்களின் எண்ணத்தையும்
இங்கு முடிவு என்பது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
என்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக,

கடும் பனியின் தாக்கத்தில் வாழும் மனிதருக்கு
சூரிய உதயம் என்பதே வரபிரசாதம்!
கடும் வெப்பத்தால் அவதியுறும் மனிதருக்கோ!
சிறு மழை சாரல் கூட வரம் தான்!
ஆகையால்,இங்கு
எது சரி? எது தவறு?என்பதை நம்முடைய
சூழல்தான் தீர்மானிக்கின்றன!
என்பதை உணர்வோம்!

சிறிது நேரம் எண்களோடு விளையாடினேன்!
எண்களுக்கு தான் மனித வாழ்க்கையோடு எத்தனை தொடர்பு!
எண் கணிதம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லை
மனித எண்ணங்களிலும் தான்!

வெறும் எண்ணிக்கையில் உயந்ததல்ல வாழ்க்கை!
நல்ல எண்ணங்களால் உய்ரந்ததே வாழ்க்கை!

என்னே கணிதம்!-நம்
எண்ணமே! கணிதம்!

******************************************************


அருள் பி ஜி
#69 S/1, C. V. D. Civilian Quarters,
I. A. F  Post, Avadi,
Chennai- 60055.
mobile no: 9884342720.
https://www.facebook.com/pgarul
pgarul@gmail.com

Sunday 9 June 2013

பாடங்களின் சிறப்பு

"அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்."
                                                                                               *பெர்னாட்ஷா*


      என்ற சொல்லுக்கிணங்க மாணவ செல்வங்களாகிய நீங்கள் படிக்கும் பாடத்தின் அவசியத்தை உணர்ந்து படிக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளது.

      * கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்னதாக தோன்றிய மொழி என்ற சிறப்பைவுடைய மொழி பாடங்களில் முதலாவாதாக வரும் தமிழர்களின்
தாய்மொழியாம் 'தமிழ்மொழி'. அந்த 'தமிழ்மொழி' இன் நல்ல படைப்புகளை நன்கு படித்து நீங்களும் 'தமிழ்மொழி' இல்  நல்ல படைப்புகளை படைக்க வேண்டும்.

      * அடுத்ததாக இன்றைய நவீன உலகத்தின்  'இணைப்பு மொழியான ஆங்கிலத்தை' நன்கு கற்று உலக நாடுகளிடையே நல்லதொரு நட்புணர்வை வளர்க வேண்டும்.

      * அதற்கு அடுத்தபடியாக 'அறிவியலின் அரசி' என்ற சிறப்புடைய 'கணிதம்' எங்கும் கணக்கு எதிலும் கணக்கு என்பார்கள் அந்த சொல்லுக்கிணங்க  நாம் இப்பூவுலகில் பிறந்த நேரத்தில் தொடங்கி இறக்கும் நேரம் வரை நாம் வாழ்ந்த காலத்தை சொல்லும் கணக்கை மனபாடமின்றி புரிந்துகொண்டு பயிற்சி செய்து கணிதத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து 'கணிதமேதை' களாக வேண்டும்.

      * அடுத்ததாக விவாத்திற்குட்பட்ட தத்துவங்களையும், அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட விதிகளைவுடைய  நம் அறியாமையை களைந்து, அறிவை வளர்க்கும்  'அறிவியல் பாடம்'    இதை நீங்கள்   ஆராய்ந்து ,சோதனை மூலம் கற்றறிந்து வருங்காலத்தில்  பல அரிய கண்டுபிடிப்புகளை   கண்டுபிடித்து  'இளம் விஞ்ஞானிகளாக' வளம்  பெற்று வலம்வர வேண்டும்.                                                                      


       * அடுத்ததாக 'சமூக அறிவியல்' இன்றைய சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை படிக்கும் நீங்கள் அதை களைந்து நாளைய   சமூகத்தில் அதற்கு தீர்வு காண வேண்டும். என்ற எண்ணத்தோடு நின்றுவிடமால் இன்று வரலாறு படிக்கும் நீங்கள் நாளைய வரலாறு உங்களை படிக்குமாறு 'வரலாறு' படைக்க வேண்டும். என்ற  எண்ணத்தோடு படிக்க வேண்டும் என்று   சொல்லி வாழ்த்துகிறேன்.              

Friday 7 June 2013

சிந்தனை



இன்று ஒரு சிந்தனை என்றும் தேவை!

'கடவுளால் ' படைக்கப்பட்டவர்கள் மனிதர்கள் என்று நம்புகிறவர்கள் பலர் அந்த கடவுளை படைத்தவனே ' மனிதன் ' என்பதை மறந்துவிட்டார்கள்?



* எப்படி கடவுள் பிறந்தார் ?

'கடவுள் ' என்றால்  அன்பானவர் கருணையுள்ளம்
கொண்டவர் முக்கியமாக பிரச்சனைகளை தீர்க்கும் வல்லவர் , நல்லவர் , போன்ற  பண்புகளை உடையவராக  மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைபாத்திரம் தான் 'கடவுள் '.

பிரச்சனைகளை  உருவாக்கி கொள்பவன் மனிதன், ஆனால்  அதை தீர்க்கவோ தன்னால் படைக்கப்பட்ட
'கடவுளை' வேண்டுகிறான் (நாடுகிறான்). என்ன கொடுமை இது ?

* வீட்டிற்கொரு மரம் வளரு -என்று
   அரசாங்கம் சொல்கிறது .-ஆனால்
   இங்கே  வீட்டிற்கொரு மதம் வளர்கிறது.
   கூடவே பிரச்சனையும்  சேர்ந்து வளர்கிறது.
   இதனால் மதத்தால் 'மதம்' பிடிக்கிறது -இவ்வாறாக
   உருவாக்கப்பட்ட  மதத்தில் தங்களுக்கு ஒரு
   'குருவாக 'உருவமாகபட்டவர் அவரவர் வழிபடும் 'கடவுள்'.

* எங்கே கடவுள் ?
 
        என்று  கேட்டால் அந்த கற்பனை பாத்திரதிற்கு
தகுந்த கற்பனையான பதிலான 'அன்பே சிவம்'
என்று சொல்வார்கள். ஆனால் இங்கே  இருப்பதோ 'சிவம்' மட்டும் தான்!
 
அன்பு எங்கே?
 
       மதம் என்னும் பெயரால் மங்கிவிட்டதா? இல்லை -அதுவும்
கற்பனை தானா?

       என்னைப்பொருத்தவரை  தவறுகள் அதிகமாவதற்கு காரணம் 'கடவுள்'  
என்ற கற்பனை பாத்திரம் தான்.

இது மக்களை  மாக்களாக மாற்றுகிறது. மேலும்

தன்னப்பிக்கையை குறைத்து அவநம்பிக்கையை வளர்கிறது.
இதில் படித்தவன், படிக்காதவன் என்ற விதிவிலக்கில்லை.
ஏதாவது தவறு செய்தால் அதனை போக்க வேண்டும், என்றால் திரும்பவும்  
அந்த தவறு நிகழமால் பார்த்துகொள்வது  தான் சரியானது.

      ஆனால் இங்கோ 'கடவுளின்' பெயரால் 'பாவமன்னிப்பு' என்ற
மற்றும் ஒரு தவறு நிகிழ்கிறது.

      ஆகவே 'மன்னிப்பு' என்பது இன்னொரு தவறின்
ஆரம்பம்.

* வளர்ந்து  வரும் அறிவியல் முன்னேற்றகளை                  
   நாம் ஆராய்ந்து தான் ஏற்றுக்கொள்கிறோம் -ஆனால்
   'கடவுள்' என்ற கற்பனையை மட்டும் 'அறிந்தும் அறியாமல்'
   ஏற்று கொள்கிறார்கள்.

   இதனை மாற்ற ஒரே  ஒரு தந்தை பெரியாரால் மட்டும் முடியாது.    ஒவ்வொருவரும் பெரியார் ஆனால் தான் முடியம் .

குறள்

       "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
        மெய்ப்பொருள் காண் பதறிவு" - குறள் 423 (எப்பொருள்யார்)

இதன்பொருள்:
     
      எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர்    யாவர் சொல்லக் கேட்பினும்;

       அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு = அப்பொருளின் மெய்யாய  
பயனைக் காணவல்லது அறிவு.

இந்த குறளுக்கு ஏற்ற விளக்கத்தின்படி எத்தனைப்பேர்  வாழ்கிறார்கள்?

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும்.  
புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

(எடுத்துகாட்டாக)

        இரண்டு நபர்களை கருத்தில் கொள்வோம்.
இரண்டு பேருக்கும் ஒரு போட்டி வைத்து யார் சொல்வது சரி? என்பதை
காண்போம்.

* போட்டியில் கலந்து கொள்பவரில் ஒருவர் பெரியவர் மற்றும் பள்ளி  
    மாணவன். பெரியவர் படித்தவர்.

* கேள்வி 1:
      8+7=? என்ன என்ற கேள்விக்கு

         மாணவன் பதில் 15 ]
                                                   எது சரி ?
         பெரியவர் பதில்  14 ]
         (பெரியவர் தவறுதலாக 14 என்கிறார்)

* கேள்வி 2:
      இறந்தவரின் இறுதி சடங்கிலிருந்து வரும்  ஒருவர் தன் மேல் 'மஞ்சள்'      
   தண்ணீர் சிறிது வுற்றி  கொள்கிறார் ஏன்?

          மாணவன் பதில்: 'மஞ்சள்' கிருமிநாசினியாக       .
                                                                இருப்பதால். ]
                                                                                                எது சரி?
          பெரியவர் பதில்:                     'சாமி  தீட்டு '.]                          

இந்த இரு கேள்விகளில் அனைவரும்

   * முதல் 'கேள்வி' இன் பதில் மாணவன் சொன்னது தன் சரி என்றும்    
      பெரியவர் சொன்னது தவறுயென்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
      
   ஆனால்

   * இரண்டாவது 'கேள்வி' இன் பதிலில் மட்டும் மாணவன் கூறிய பதில் சரி  
      தான் என்று தெரிந்து இருந்தாலும் பெரியவரின் பதிலான 'சாமி தீட்டு'  
      என்பதை தவறு என்று சுட்டிக்காட்ட தயங்குகிறார்கள் ஏன்?.

காரணம் சாமி குத்தமா?

         'ஆக' எவ்வளவு தான் அறிவியல் தன்மைபடி ஆராய்ந்து உண்மையை    சொன்னாலும், இந்த கற்பனை பாத்திரமான 'கடவுளை 'பற்றி ஆராய்வதே
குற்றம் என்று நம்பும் மக்கள் இடையே 'கடவுள்'
என்பது அவர்களுக்கு புரியாதலால் 'குரு'வாகவும்
புரிந்தவர்களுக்கு 'கடவுள் ' என்பது கற்பனை ஆகவும்
மொத்தத்தில்  'கடவுள் ' என்பது 'புரியாதபுதிர்' ராக
தான் உலா வருகிறது.

      இங்கே அறிவியல் தன்மை படி என்பது அறிவியல் படி இன்று சரியானதாக    
 உள்ள ஒன்று நாளை தவறாக இருப்பதாக கண்டுபிடிக்கபடுகிறது .

       ஆக அறிவியலே  ஆராய்ச்சிக்கு  உட்படுத்தும் போது 'கடவுளை 'மட்டும் ஆராயாமல் ஏற்பது சரியா?

       'நாத்திகம்' என்பது அனைத்தையும் அப்படியே ஏற்கமால்  ஆராய்ச்சி செய்து ஏற்பது என்று "சாக்ரடிஸ்"  அவர்கள் கூறுவார். ஆனால் இங்கே 'நாத்திகம்' என்பதற்கு 'கடவுள்'  மறுப்பாளர்கள் என்ற முத்திரை...
 
       'கடவுள்' என்ற கற்பனை பாத்திரத்தால் ஒற்றுமை
சீர்குலைகிறது?

       ஆனால் 'கடவுள்' இல்லை என்னும் போது ஒற்றுமை வலுபெருகிறது?

        'கடவுள் இல்லை' என்னும்  போது அதனை எதிர்ப்பாதற்காக ஒற்றுமை உருவாகிறது எப்படி என்றால்?

   * கடவுளை  வழிபடுப்பவர்கள் மதத்திற்கு  ஓர்
      'குரு' வை  தங்களின்  தலைவனாக வழிப்படுவதோடு
      மட்டும் அல்லாமல் தங்களின்  'கடவுள்' தான்  பெரியவர், என்றும்      
      உயர்ந்தவர் ,சக்தியுள்ளவர், என்றும் அவர்களுகிடையே சண்டையும்,  
      வன்முறையும், நிகழ்கின்றன. ஆக 'கடவுள்'  என்ற கற்பனைப்பாத்திரம்  
      இவ்வாறாக ஒற்றுமையை  சீர்க்குலைகிறது.

      ஆனால்  'கடவுளே ' இல்லை என்று ஒருவர் கூறும் போது அதனை எதிர்க்க எல்லாம் மதத்தினரும் ஒன்றுபடுகின்றனர்.

       இதன் மூலம் 'கடவுள் ' என்ற கற்பனைபாத்திரத்திற்கு உயிர்க்கொடுக்கும் போது ஒற்றுமை சீர்க்குலைக்கிறது.

மாறாக

       'கடவுள் ' இல்லை என்று கூறும் போது அனைவரும் ஒன்றுபட்டு
ஒற்றுமை வலுப்படுகிறது. இதனை நாம்  நன்கு சிந்திக்க வேண்டும்.

       இருக்கும்  இடத்தை விட்டு இல்லாததை தேடுவதா
ஆன்மிகம்?   இல்லை இல்லை, உண்மையான ஆன்மிகம் என்பது...



      'இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

      நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது'
                 
      "இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட 
       ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"

                                                              *அன்னை தெரசா*


      ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று பிரிப்பதைவிட நல்ல மனிதர்களில் தான் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து தேடினாலே போதும்...

Monday 20 May 2013

வெற்றி


நாம் அனைவரும்
"வெற்றி" பெற வேண்டும் என்ற
எண்ணத்தோடு உழைக்கிறோம்
அதற்கு மாறாக
"தோல்வி" அடையக்கூடாது என்ற
எண்ணத்தோடு உழையுங்கள்
நிச்சயமாக "வெற்றி"
உங்கள் முன் வாசலின்
வழியாக வரும்
"தோல்வி"
உங்கள் பின் வாசலின்
வழியாக செல்லும்...